“20 கேட்ட ராமதாஸ் 10.5க்கு ஒத்துக்கிட்டது எதுக்காக… எல்லாம் தேர்தல் நாடகம்” – திருமாவளவன் தாக்கு

 

“20 கேட்ட ராமதாஸ் 10.5க்கு ஒத்துக்கிட்டது எதுக்காக… எல்லாம் தேர்தல் நாடகம்” – திருமாவளவன் தாக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மதுரை வாடிப்பட்டியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் பங்கேற்றார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “1931இல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் மட்டுமே சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதன்பிறகு ஓபிசி சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழவே இல்லை. ஒருவேளை 10.5% வன்னியர்கள் இருக்கிறார்கள் எனில் 1931இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகவே இருக்க முடியும்.

“20 கேட்ட ராமதாஸ் 10.5க்கு ஒத்துக்கிட்டது எதுக்காக… எல்லாம் தேர்தல் நாடகம்” – திருமாவளவன் தாக்கு

இப்போது நடக்கும் 2021 தேர்தலை வைத்துப் பார்க்கும்போது, ஏறத்தாழ 70 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். 36ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு 2001 மக்கள்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டது. வன்னியர்களுக்கு 20% உள் இட இதுக்கீடு கேட்டவர் எப்படி 10.5%க்கு ஒப்புக்கொண்டார்? மீதமுள்ள 9.5% மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா? ஆகவே இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என, ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும். இதன்பின் ஒதுக்கீடு போன்ற நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.