அடுத்து வேல்- ஐ கையில் எடுத்த திருமாவளவன்!

 

அடுத்து வேல்- ஐ கையில் எடுத்த திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் வேல் வழங்கினர்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவருவதையடுத்து மக்களை கவர அவரவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தவகையில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் முதன்முதலில் கையில் எடுத்தது வேல் யாத்திரை. அதன்பின் முக. ஸ்டாலின் கையில் வேல் ஏந்தினார். தொடர்ந்து சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எம்ஜிஆரையும், வேலையும் தேர்தலுக்காக பங்குப்போட்டுவருகின்றனர். அந்தவகையில் திருமாவளவனும் தற்போது வேல்- ஐ கையில் ஏந்தியுள்ளார்.

அடுத்து வேல்- ஐ கையில் எடுத்த திருமாவளவன்!

சென்னை அண்ணா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி நிர்வாகிகள் திருமாவளவனுக்கு வெள்ளி வேல்-ஐ பரிசாக வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “வேல்- ஐதேர்தலுக்காக ஏந்தவில்லை. இது தமிழர்களின் நீண்ட நாள் பாரம்பரிய ஒரு பண்பாடு. எங்கள் கட்சியிலும் முருக பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே என்னிடத்தில் வேல்-ஐ வழங்கியுள்ளனர். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் நாடகமாடுகிறது.

கடந்த 25 ஆம் தேதியே ஆளுநர் உச்சநீதிமன்றத்திற்கு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கிறார். ஆனால் 30 ஆம் தேதி ஆளுநரை முதல்வர் சந்தித்துவிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்லியிருப்பதாக ட்வீட் செய்திருக்கிறார், ஆளுநர் முதல்வர் இடத்திலே உண்மையை மறைத்தாரா? அல்லது முதல்வர் தமிழக மக்களிடம் உண்மையை மறைக்கிறாரா என்பது தெரியவில்லை. டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர், 200 பேரை பலி கொடுத்து உலகத்திற்கு அறப்போராட்டத்தை வழிகாட்டுகின்றனர். அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது வேதனையளிக்கிறது” எனக் கூறினார்.