‘இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் இருப்பர்’ : எல்.முருகன் உறுதி!

 

‘இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் இருப்பர்’ : எல்.முருகன் உறுதி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் வென்று பாஜக உறுப்பினர்கள் இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் இருப்பார்கள் என எல்.முருகன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் தமிழக பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தேவேந்திரகுல வேளாளர் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அக்குல மக்களின் அங்கீகாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி கோவை வரும் பிரதமர் பாஜக நிகழ்ச்சியிலும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் என்று தெரிவித்தார்.

‘இரட்டை இலக்கத்தில் சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் இருப்பர்’ : எல்.முருகன் உறுதி!

தொடர்ந்து, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். மேலும் எல்லா கட்சிகளும் தற்போது வேல் வைத்து பிரச்சாரம் செய்வதற்கு பாஜக தான் காரணம் என்று கூறிய எல்.முருகன், சட்டசபையில் இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.