‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

 

‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். இதேபோல் பாஜக நிர்வாகிகள் பலரும் கூட்டணி ஆட்சிக்கு வழிவகை செய்யும் தொனியிலேயே பேசி வருகின்றனர்.

‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே மக்களிடம் கொடுக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதிமுக இருக்குமிடம் வெற்றி பெறும். 2021ல் எங்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்றார்.அதிமுக அரசுக்கு மக்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க செய்வார்கள் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில் பாஜக நிர்வாகிகளின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை’ : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. காங்கிரஸ்,திமுக, அதிமுக என எதுவாக இருந்தாலும் தனிக்கட்சி ஆட்சி தான் அமைந்துள்ளது. 2006ல் திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றாலும் கூட காங்கிரஸுடன் அதிகாரத்தை அது பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே இருந்துள்ளதே தவிர ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.