தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

 

தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்களிக்கும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டு தான் மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும். மாஸ்க் இல்லாமல் தயவு செய்து செல்ல வேண்டாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 3,500க்கு மேல் பதிவாகியுள்ளது என்று கூறினார்.

தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தொடர்ந்து பேசிய அவர், கட்டுப்பாடு பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் எடுப்பது 7ம் தேதிக்கு பிறகு முழு வீச்சில் தொடங்கும். காய்ச்சல் முகாம்களும் முழுவீச்சில் நடக்கும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தேர்தலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது அந்த அளவுக்கு வீரியத்துடன் இருக்காது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் இதுவரை பாதிப்பு இல்லை என்றார்.

தேர்தலுக்கு பிறகு லாக்டவுனா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

மேலும், கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம். 6ம் தேதிக்கு பிறகு லாக் டவுன் போடப்படும் என வதந்திகள் பரவுகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். கவனக்குறைவாக இருந்ததால் தான் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.