மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை!

 

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி உட்பட மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் முதுநிலை, மருத்துவ படிப்புகளை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 50 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை!

இதற்கு நீதிமன்றத்தின் வாயிலாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முறையானது கைவிடப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் 190 உயர் சிறப்பு படிப்புகளுக்கான இடங்கள் உள்ளதாகவும், இதனால் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும், மருத்துவ மேற்படிப்புகளிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 50% இடஒதுக்கீட்டுக்கான இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்க என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை!

இதற்கு தனியார் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.