தேனி: கொரோனாவால் இறந்தவர் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

 

தேனி: கொரோனாவால் இறந்தவர் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

தேனியில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்று எரித்த விவகாரம் தொடர்பாக தேனி கலெக்டரிடம் மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

தேனி: கொரோனாவால் இறந்தவர் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
தேனி மாவட்டம் கூடலூரில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸ் வராததால், தள்ளுவண்டியில் வைத்து மயானாத்துக்கு கொண்டு சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று உறுதியான அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காதது, கொரோனாவால் இறந்த பெண்ணை அரசே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாதது பற்றி பல்வேறு கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியது.

தேனி: கொரோனாவால் இறந்தவர் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்
இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமைகள் ஆணையம். இது குறித்து நான்கு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.