10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

 

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

தேனி

ஆண்டிபட்டி அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தேனி மாவட்டம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள கொண்டம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மகாலிங்கம்(35). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகாலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.