உற்சாகமிழந்த தேனி வீடு! சிறுவாபுரி தெய்வத்திடம் மனமுருகிய ஓபிஎஸ்!

 

உற்சாகமிழந்த தேனி வீடு! சிறுவாபுரி தெய்வத்திடம் மனமுருகிய ஓபிஎஸ்!

முதல்வர் நாற்காலி சண்டையில் மனமுடைந்த ஓபிஎஸ், சொந்த ஊருக்கு போய்விட்டு வரலாம் என்று கடந்த புதன்கிழமை தேனிக்கு புறப்பட இருந்தார். ஆனால், காந்திஜெயந்திக்கு ஆளுநர் நிகழ்வில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அந்நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பாட்டார்.

உற்சாகமிழந்த தேனி வீடு! சிறுவாபுரி தெய்வத்திடம் மனமுருகிய ஓபிஎஸ்!

வழக்கமாக ஓபிஎஸ் தேனிக்கு சென்றால் வழியெங்கும் வாழ்த்து கோஷங்கள் அணிவகுக்கும். ஆனால், இந்த முறை வழியெங்கும் வெறிச்சோடிக்கிடந்தது. இரவு 9 மணிக்கு மேல் சொந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கேயே வழக்கமாக இருக்கும் கூட்டம் இல்லை. ரொம்ப நெருக்கமானவர்கள் சிலர் மட்டுமே இருந்துள்ளனர். எப்போதும் உற்சாகமாக இருக்கும் தன் வீடு இப்படி உற்சாகமில்லாமல் இருந்தது கண்டு முகம் இறுகிப்போய்விட்டதாம் ஓபிஎஸ்சுக்கு.

உற்சாகமிழந்த தேனி வீடு! சிறுவாபுரி தெய்வத்திடம் மனமுருகிய ஓபிஎஸ்!

சென்னையில் 7ம் தேதி பஞ்சாயத்து இருப்பதால், 5ம் தேதி தேனியில் சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, அன்று இரவே அல்லது மறுநாள் காலையில் புறப்பட்டு சென்னை வரும் ஓபிஎஸ், ஊருக்கு கிளம்பும்போதே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் கோயிலில் சென்று பூஜை செய்து மனமுருகி இருக்கிறார்.