“ஜனவரி 11 வரை” 50 % இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும்!

 

“ஜனவரி 11 வரை” 50 % இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும்!

ஜனவரி 11 வரை 50% இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் செயல்பட அனுமதி என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது.

“ஜனவரி 11 வரை” 50 % இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும்!

தமிழகத்தில் தியேட்டர்கள் 100% இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் திட்டமிட்டபடி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் 100% இருக்கைக்கு அனுமதி என்பது மரணப்படுக்கைக்கு சமம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசும் முடிவை திரும்ப பெற அறிவுறுத்தியுள்ளது.

“ஜனவரி 11 வரை” 50 % இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க வேண்டும்!

இந்நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் 100% இருக்கைகளுக்கு எதிரான வழக்கில் ஜனவரி 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை வழக்கறிஞருக்கு ஆணை பிறப்பித்துள்ள நீதிமன்றம் பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க நேரிடும் எனவும் கூறியுள்ளது.