ஐபிஎல் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

 

ஐபிஎல் போட்டிகளை  தியேட்டர்களில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐபிஎல் போட்டிகளை  தியேட்டர்களில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

இந்நிலையில் ஐபிஎல், உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களது கோரிக்கையை பதினைந்தாம் தேதி நடக்கும் கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தவும் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதேபோல் தியேட்டர்களில் படம் வெளியாகி ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளை  தியேட்டர்களில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

முன்னதாக கியூப் கட்டணத்தை இனி செலுத்த முடியாது என திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதிய நிலையில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் பதிலடி கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது .