டீக்கடைக்கு சென்ற இளைஞர் தலை துண்டித்து கொலை

 

டீக்கடைக்கு சென்ற இளைஞர் தலை துண்டித்து கொலை

டீ குடித்துவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிசென்ற இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர்.

டீக்கடைக்கு சென்ற இளைஞர் தலை துண்டித்து கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகெ ஸ்டாலின் காலனியை சேர்ந்தவர் மதன்குமார். பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவர், டீ குடித்து விட்டு வருகின்றேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.

வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் செல்போனை தொடர்புகொண்டும் எடுக்காததால் தேடியிருக்கிறார்கள். அப்போது, மந்தித்தோப்பு பகுதியில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

டீக்கடைக்கு சென்ற இளைஞர் தலை துண்டித்து கொலை

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.