மனைவியை பார்க்க சென்ற இளைஞர் அடித்துக்கொலை… பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!

 

மனைவியை பார்க்க சென்ற இளைஞர் அடித்துக்கொலை… பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே பிரிந்து சென்ற மனைவியை பார்க்க சென்ற இளைஞர், பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முகமது இம்ரான் (32). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த தொட்டபேளூர் பகுதியை சேர்ந்த ருக்கு என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மனைவியை பார்க்க சென்ற இளைஞர் அடித்துக்கொலை… பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!

முகமது இம்ரான் மனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளர். ஆனால், ருக்குவின் உறவினர்கள் அவரை பார்க்க முடியாமல் தடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மனைவியை பார்க்க மீண்டும் தொட்ட பேளூர் சென்றுள்ளார். இதனை அறிந்த, ருக்குவின் உறவினர்கள் முகமது இம்ரானை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை கிராம மக்கள் மீட்டு கிருஷ்ணகிரிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ருக்குவின் உறவினர்களான தொட்டபேளூரை சேர்ந்த ஜமீர், சாதிக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.