குளியலறையில் அலறிய மனைவி… பதறிய கணவன்.. கிழிக்கப்பட்ட கட்டிட தொழிலாளியின் காது
குளியலறையில் மனைவி குளிப்பதை பார்த்த கட்டிட தொழிலாளியை அவரது கணவன் பிடித்து சரமாரியாக தாக்கினார். இதில் அவரது காது கிழிந்தது. இந்த சம்பவம் பம்மலில் நடந்துள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (38). இவர் சென்னை பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வேலை செய்ய அனுமதி கிடையாது. இதனால், அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தூக்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென சபலம் ஏற்பட்டுள்ளது. தூக்கத்திலேயே, கட்டிடத்தின் அருகில் குளிக்கும் சத்தம் கேட்டுள்ளது மூர்த்திக்கு. இதனால், எழுந்த மூர்த்தி அருகில் உள்ள வீட்டின் குளியலறையை எட்டி பார்த்துள்ளார். இந்த நிலையில், தான் குளிப்பதை ஒருவர் பார்த்தை அந்த பெண் கவனித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், அலறியுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு குளியலறைக்கு பதறியபடி வந்த அவர், மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, தான் குளிப்பதை அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் பார்த்ததாக கூறியுள்ளார். இதனால் கொந்தளித்த கணவன், கட்டிட தொழிலாளியை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மூர்த்தியின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து சங்கர்நகர் காவல்நிலையத்தில் மூர்த்தி ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரின் மூர்த்தியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “பம்மல் சரஸ்வதிபுரத்தில் கணேஷ் (பெயர் மாற்றம்) என்பவர் தனது மனைவி செல்வியுடன் (பெயர் மாற்றம்) வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் கணேஷ் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவரது மனைவி செல்வி வேலையை முடித்து வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றுள்ளார். குளியலறையில் மேற்கூரை கிடையாது. அருகில் தங்கியிருந்த கட்டிட வேலை செய்து வரும் மூர்த்தி இதனை சில நாட்களாக கவனித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வேலை இல்லாததால், அருகில் உள்ள வீட்டில் குளிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்கு சென்று செல்வி குளிப்பதை பார்த்துள்ளார். அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.