கணவனையும் பக்கத்து வீட்டுக்காரரையும் எரித்து புதைத்த பெண்- காதலனுடன் சிக்கினார்

 

கணவனையும் பக்கத்து வீட்டுக்காரரையும் எரித்து புதைத்த பெண்- காதலனுடன் சிக்கினார்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் வெள்ளகோவில் சாலையை சேர்ந்தவர் முத்துசாமி(70). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். முத்துசாமி இடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரது மனைவி 20 வருடங்களுக்கு முன்பாகவே பிரிந்து சென்றுவிட்டார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மூலனூர் வெள்ளகோவில் சாலையில் உள்ள வீட்டில் முத்துசாமி மட்டும் தனியே வசித்து வருகிறார்.

கணவனையும் பக்கத்து வீட்டுக்காரரையும் எரித்து புதைத்த பெண்- காதலனுடன் சிக்கினார்

இவருக்கு மூலனூர் அருகே கிலங்குண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட சுள்ளிபெரிக்கபாளையத்தில் ஒரு தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பணிகளை கவனிப்பதற்காக அம்சா மற்றும் அவரது கணவர் ரவியை நியமித்துள்ளார். இந்த தோட்டத்திற்கு அருகே வேலுச்சாமி என்பவரின் தோட்டத்தையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். வேலுசாமி கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது தோட்டத்திலேயே அவருக்கும் வேலை கொடுத்துள்ளார்.

அம்சாவுக்கும் முத்துசாமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு வேலுச்சாமி இடையூறாக இருந்ததால் அவரை அடித்து எரித்து தோட்டத்திலேயே புதைத்து விடுகிறார் முத்துசாமி. இதற்கு உடந்தையாக இருந்தது அம்சா. ஆனால் அவரே தனது கணவர் ரவியிடம் இதுகுறித்து எதேச்சையாக சொல்லிவிட, ரவியோ பலரிடம் அதைச் சொல்லியிருக்கிறார். இதனால் முத்துசாமிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கணவனையும் பக்கத்து வீட்டுக்காரரையும் எரித்து புதைத்த பெண்- காதலனுடன் சிக்கினார்

இந்தநிலையில் முத்துசாமிக்கும் அம்சாவிற்கும் இடையில் இருக்கும் கள்ள உறவை பற்றி ஊரார் ரவியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ரவி, முத்துசாமியிடம் வந்து சண்டை போட்டிருக்கிறார். ரவியை விட்டுவைத்தால் அம்சாவுடன் உல்லாசமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த முத்துசாமி அவரை அடித்து கொலை செய்திருக்கிறார். அதற்கு அம்சா உடந்தையாக இருந்திருக்கிறார். ரவியை கொலை செய்து எரித்து பின்னர் பாதி எரிந்த உடலை தோட்டத்திலேயே புதைத்திருக்கிறார்.

இதன் பின்னர் அம்சாவும் முத்துசாமியும் எப்போதும் போல் தோட்ட வேலைகளை கவனித்துக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஊரை நம்ப வைப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று தன் கணவரை காணவில்லை என்று மூலனூர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் அம்சா. போலீசார் விசாரிப்பதாக சொன்ன பின்னர், வழக்கம்போல முத்துச்சாமி உடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில் வேலுச்சாமியின் சகோதரி தனது அண்ணனை காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவிக்க,போலீசார் இதுகுறித்து விசாரணையில் இறங்க அப்போது அம்சாவும் முத்துசாமியும் சேர்ந்து வேலுச்சாமியை கொன்று எரித்து புதைத்ததை சொல்லியிருக்கிறார்கள். அப்போது போலீசாருக்கு சந்தேகம் வர அப்படியானால் ரவி எங்கே என்று மீண்டும் துருவித் துருவிக் கேட்க, ரவியையும் கொலைசெய்து எரித்து புதைத்ததை சொல்லியிருக்கிறார்கள். இதை அடுத்து புதைக்கப்பட்டதாக சொன்ன ரவி வேலுச்சாமி உடலை தோண்டி எடுத்து ஆய்வுக்காக அனுப்பி இருக்கின்றனர். முத்துசாமியையும், அம்சாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.