முருங்கை காய் பறித்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!

 

முருங்கை காய் பறித்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே வீட்டின் மாடியில் முருங்கைக்காய் பறிக்க சென்றபோது தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகில் உள்ள விஜயநகரியை சேர்ந்தவர் அம்மாபழம். இவரது மகள் செல்வ அஜிதா (31). இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கருங்குளத்தான் விளையை சேர்ந்த ராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

முருங்கை காய் பறித்தபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்காக செல்வ அஜிதா, நேற்று முன்தினம் விஜயநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று காலை சமையல் செய்வதற்காக தனது வீட்டின் மாடியில் ஏறி, அருகில் இருந்த முருங்கை மரத்தில் காய் பறிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கால்தவறி 15 உயர மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வ அஜிதாவை, பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.