பைக் மீது மோதி வேன் தீ பற்றியதில், இருவர் பலி!

 

பைக் மீது மோதி வேன் தீ பற்றியதில்,  இருவர் பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதி தீப்பற்றிய விபத்தில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் பகுதியில் உள்ள தூத்துக்குடி – நெல்லை சாலையில் நேற்றிரவு தூத்துக்குடிக்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த பால்துரை என்பவர் ஓட்டிச் சென்ற வேன், எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற இருசக்கர வாகத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

பைக் மீது மோதி வேன் தீ பற்றியதில்,  இருவர் பலி!

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் வேனின் அடியில் சிக்கி கொண்ட நிலையில், வேன் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அவர்கள் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் முறப்பநாடு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைககாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.