“கொரோனாவை வென்ற கொடூரனே” – தெறிக்க விடும் தென்காசி அலப்பறை

 

“கொரோனாவை வென்ற கொடூரனே” – தெறிக்க விடும் தென்காசி அலப்பறை

கொரோனா தொற்று உயிரிழப்பு காரணமாக உலகமே உயிரச்சத்தில் உள்ள நிலையில், நம்ம ஆட்கள் , கொரோனாவை அசால்டாக டீல் செய்வதை சொல்கிறது இந்த போஸ்டர்.

“கொரோனாவை வென்ற கொடூரனே” – தெறிக்க விடும் தென்காசி அலப்பறை

கல்யாணம், காது குத்து, சடங்கு என எல்லாத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரத்தில் வந்த நமக்கு, கொரோனா மட்டும் என்ன தக்காளி தொக்கா என கேட்கிறார்கள் இந்த அண்ணனின் விழுதுகள்.

தென்காசியில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் என்பவர், சிகிச்சைக்குபின் வீடு திரும்புகிறார். அவரை வரவேற்று பேனர் வைத்து அசத்தியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

“கொரோனாவை வென்ற கொடூரனே” – தெறிக்க விடும் தென்காசி அலப்பறை

” சளியை வென்ற சரித்திரமே.., இருமலை வென்ற இருமுகனே..,காய்ச்சலை வென்ற காப்பானே..,தலைவலியை வென்ற தலைவனே., மொத்தத்தில் கொரோனாவை வென்ற கொடூரனே., மருத்துவமனையை விலாசிவிட்டு திரும்பும் ” என்ற வாசகத்துடன் தெறிக்க விட்டுள்ளனர்.

மாலை , மரியாதை செய்யிறேன்னு, சமூக இடைவெளியை காற்றில் விட்டுறாதீங்கப்பே..அப்பறம் உங்களுக்கும் ஒரு பேனர் வைக்கிறமாதிரி ஆகிறப்போவுது என்கின்றனர் அப்பகுதி மக்கள்…!