நிவர் புயல் – தயார் நிலையில் தமிழக அரசு

 

நிவர் புயல் – தயார் நிலையில் தமிழக அரசு

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயராக உள்ளது, கீழ்வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது தமிழக அரசுநீராதாரமாக இருக்கக்கூடிய வடகிழக்கு பருவமழையானது துவங்கிய காலம் முதல் முதல்வர் மற்றும் இந்திய ஆட்சி பணியாளர்கள் அறிவுரையின்படி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோரணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளது. 2 தேசிய பேரிடர் மீட்பு படை சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.

நிவர் புயல் – தயார் நிலையில் தமிழக அரசு

நிவர் புயல், கன மழை, அதீத மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகள், நீர் நிலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்வாய்களில் அடைப்பு இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் – தயார் நிலையில் தமிழக அரசு

மின் கம்பிகள் துண்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இடி, மின்னல் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் நீர் தேங்குவதை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மண்டல அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் டவர் சரியாக உள்ளதா என்பதை கண்காணித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நிவர் புயல் – தயார் நிலையில் தமிழக அரசு

தேவையான உணவுகளை பொதுமக்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். புயல் கரைகளை கடக்கும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுறது. ஊடகங்கள் அளிக்கும் செய்தியை மட்டுமே நம்ப வேண்டும். சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தையை நம்ப வேண்டாம். கஜா புயலை போல் இந்த புயல் தாக்கும் நிலை தற்போது இல்லை.