“வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” – விவசாயிகள் சூளுரை

 

“வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” – விவசாயிகள் சூளுரை

தஞ்சாவூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, தங்களின் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தஞ்சை ரயில் முன்பு அவரது உருவப் படத்திற்கு அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இதில் கலந்துகொண்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவினால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

“வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” – விவசாயிகள் சூளுரை

மேலும், நம்மாழ்வார் போராடி வெற்றி பெற்ற பிடி கத்தரிக்காய் உள்ளிட்ட அனைத்து விதைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் புகுத்தும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் மண் மலடாகி விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலமாக மாறிவிடும் என்பதால், நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என சூளுரை எடுத்துக் கொண்டனர்.