தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : மதுபோதையில் செய்த வெறிச்செயல்!

 

தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : மதுபோதையில் செய்த வெறிச்செயல்!

கடலூர் அருகே மதுபோதையில் தந்தையை மகனே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த தம்பதி பரசுராமன்(55) – புவனேஷ்வரி. இவர்களது இளைய மகன் சக்திவேல்(22). பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய சக்திவேல், மீன்பிடித் தொழில் செய்யும் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார். அப்போது, அவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் தாயாரிடம் சண்டை போடுவதையும், சாலையில் செல்வோரிடம் வம்பிழுப்பதையும் வாடிக்கையாக செய்து வந்துள்ளார் சக்திவேல்.

தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : மதுபோதையில் செய்த வெறிச்செயல்!

இளம் வயதிலேயே மதுபோதைக்கு அடிமையான சக்திவேலை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர பரசுராமன், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சக்திவேலின் உடல்நிலை மோசமானதால் பரசுராமன் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், சிகிச்சைக்கு இணங்காத சக்திவேல் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்துள்ளார். இதன் காரணமாக, சக்திவேலுக்கும் பரசுராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற மகன் : மதுபோதையில் செய்த வெறிச்செயல்!

மதுபோதையின் உச்சத்தில் இருந்த சக்திவேல், ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து பரசுராமனை அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரசுராமன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், தப்பிச் சென்ற சக்திவேலை மீன் மார்க்கெட்டில் வைத்துக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.