கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை; அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்!

 

கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை; அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்!

கொரோனா தொற்றின் தீவிரம் குறையில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் சண்முகம் என்று ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை; அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்!

இந்நிலையில் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் பாதிப்பு விகிதம் 3% ஆகவும், கோவையில் 5% ஆகவும் உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக பின்பற்றினால் கொரோனா பரவலை பெருவாரியாகக் குறைக்கலாம். அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்; தொற்று குறைந்தால் பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகள் தரப்படும்.

கொரோனா தொற்றின் தீவிரம் குறையவில்லை; அடுத்த 20 நாள்கள் சவாலானதாக இருக்கும்!

தனிமைப்படுத்துதலை மீறுபவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆய்வில் மாநகர பகுதிகளில் கொரோனா குறைந்திருந்தாலும் 5 மண்டலங்களிலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் இருந்து வருகின்றனர். நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே கோவையில் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.