’இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து

 

’இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க்கது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் அணு நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இன்று காக்ராபர் அணுமின் நிலையத்தின் 3 வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான விஞ்ஞானிகளுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து

பிரதமரின் வாழ்த்துச் செய்தியில், “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்! உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஔிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது, வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்” என்று தெரிவித்துள்ளார்.