பெண்களை கொடூரமாக கொல்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் வழக்கம் – சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள்

 

பெண்களை கொடூரமாக கொல்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் வழக்கம் – சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள்

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வதற்கு முன்பாக அப்பெண்களை போட்டோ எடுத்து வைப்பது அந்த சைக்கோவின் வழக்கம். அந்த சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள் கிடைத்திருக்கின்றன. அந்த 130 பெண்களும் காணவில்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த சைக்கோ 130 பெண்களை கொடூரமாக கொலை செய்து இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

பெண்களை கொடூரமாக கொல்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் வழக்கம் – சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள்

பெண்களை வன்கொடுமை செய்த பின்னர் சுத்தியலால் அடித்து துன்புறுத்தி மகிழ்ச்சி அடையும் அந்த சைக்கோ உயிர் பிரியும் நேரத்திற்கு முன்பாக பெண்களின் காது ஆபரணங்களை பறித்து மறைத்து வைத்துக் கொள்வதும் வழக்கம். அப்படி மறைத்து வைக்கப்பட்டுள்ள காதணிகள் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றன. 77 வயதான அந்த சைக்கோ ரோட்னி ஜேம்ஸ் அல்காலா கலிபோர்னியாவில் உள்ள சிறையில் இயற்கை மரணம் எய்திருக்கிறான். மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவன் இயற்கையாக மரணம் அடைந்து விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களை கொடூரமாக கொல்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் வழக்கம் – சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள்

1968ஆம் ஆண்டில் 8 வயது சிறுமி, 1973 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அந்த சைக்கோ சிறைதண்டனை அனுபவித்தான். 1 979 ஆம் ஆண்டில் 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக 1980இல் மரண தண்டனை அளிக்கப்பட்டது . நான்காண்டுகளில் தண்டனை ரத்தாகிவிட்டது. 2010ஆம் ஆண்டில் டிஎன்ஏ பரிட்சை மூலம் குற்றம் உறுதி ஆனதால் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டில் மேலும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் அவனுக்கு மரண தண்டனை நிரூபணமானது.

பெண்களை கொடூரமாக கொல்வதற்கு முன்பு போட்டோ எடுத்து வைக்கும் வழக்கம் – சைக்கோவின் வீட்டில் 130 பெண்களின் போட்டோக்கள்

2013ம் ஆண்டில் மேலும் இரண்டு பெண்களின் கொலை வழக்கும் உறுதியானது. 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மறைத்து வைத்திருந்த பெண்களின் காதணிகள்தான் அவன் செய்த குற்றத்தை உறுதிப்படுத்தின. அவனுடைய வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தனை பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள். இதன்மூலம் 130 பெண்களை அவன் கொடூரமாக கொலை செய்து இருப்பது அம்பலமாகியிருக்கிறது.