பெரியார் சிலையை உடைப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் கைது

 

பெரியார் சிலையை உடைப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் கைது

கோவை

கோவையில் பெரியார் சிலையை உடைப்பதாக கூறி வாட்ஸ் குழுவில் பதிவிட்ட நபரை போலீசார் கைதுசெய்தனர்.

பெரியார் சிலையை உடைப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் கைது

கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பிரபு (40). சில நாட்களுக்கு முன்பு இவருடைய வாட்ஸ் அப்பிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், பெரியார் சிலையை உடைப்பதாக ஒரு நபர் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்தபோது, பதிவிட்ட நபர் கள்ளப்பாளையம் வ.உ.சி தெருவில் வசிக்கும் மனோகரன் (40), என்பதும், அவர் பாரத் முன்னணி என்ற அமைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருப்பதும் தெரியவந்தது.

பெரியார் சிலையை உடைப்பதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட நபர் கைது

இதனையடுத்து, மெசேஜ் குறித்து பிரபு செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மனோகரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.