வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது

 

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது

தென்காசி

சங்கரன்கோயில் அருகே வாகன சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அடுத்த ஆவுடையாள்புரம் பகுதியில், திருவேங்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ-க்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது

இந்த சோதனையில் அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அந்த நபரிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் உதவி ஆய்வாளர் முருகனை அவதூறாக பேசியும், பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்டம் அழகனேரியை சேர்ந்த விஜயகுமார்(40) என்பவர் மீது உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தார். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.