கணவனும் மாமியாரும் ஆடைகளை அவிழ்த்துவிட நிர்வாண பூஜை செய்த சாமியார்

 

கணவனும் மாமியாரும் ஆடைகளை அவிழ்த்துவிட நிர்வாண பூஜை செய்த சாமியார்

கணவனும் மாமியாரும் சேர்ந்து ஆடைகளை அவிழ்த்துவிட்டு பெண்ணை நிர்வாண பூஜைக்கு அனுப்பி வைத்த கொடுமை மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் நடந்திருக்கிறது. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இந்த அக்கிரமத்தினை அரங்கேற்றி இருக்கின்றனர்.

கணவனும் மாமியாரும் ஆடைகளை அவிழ்த்துவிட நிர்வாண பூஜை செய்த சாமியார்

திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் ஆண் குழந்தை இல்லாததால் ஆண் குழந்தை பிறக்க வழி செய்ய வேண்டும் என்று சாமியாரிடம் சென்றிருக்கிறார் அப்பெண்ணின் கணவரும் மாமியாரும். சாமியார் பெண்ணை வரவழைத்து விபூதியை கொடுத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார். பின்னர் உடல் முழுவதும் விபூதியை பூசி நிர்வாண பூஜை செய்ய வேண்டும். அதன்பின்னர் ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

இதைக்கேட்டு பதறி துடித்திருக்கிறார் அப்பெண். ஆனால், கணவரும் மாமியாரும் நிதானமாக, இதற்கு ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும். இல்லையென்றால் உன்னை சும்மா விட மாட்டோம் என்று மிரட்டியிருக்கின்றனர். கணவரும் மாமியாரும் இப்படி மிரட்டி கேட்டபோது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அப்பெண்ணின் ஆடைகளை கணவரும் மாமியாரும் அவிழ்த்துப் போட்டுவிட்டு நிர்வாணமாக சாமியார் முன் உட்கார வைத்துவிட்டனர்.

அந்த சாமியார் விபூதியை எடுத்து அப்பெண்ணின் உடல் முழுவதும் பூசி இருக்கிறார். இந்த கொடுமைக்கு எல்லாம் என்றைக்கு விடிவுகாலம் என்று அப்பெண் நினைத்துக் கொண்டிருக்கும் போது, கணவனும் இந்த வாழ்க்கையும் வேண்டுமென்றுதான் இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்கும்போது அதற்கு பங்கம் வைத்திருக்கிறார் கணவர்.

ரகசியமாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கணவன் வாழ்ந்து வந்தது மனைவிக்கு தெரியவந்திருக்கிறது. அதைக் கேட்டால் ஆண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாக இருக்க கூடாது என்று முதல் மனைவி தான் இருக்கும் போதே இரண்டாவது மனைவியை திருமணம் செய்து இருக்கிறார் என்றும், தன்னை நிர்வாண பூஜை செய்து துன்பப்படுகிறார்கள் என்றும் அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர், மாமியார்,சாமியார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.