வேலூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,652ஆக அதிகரிப்பு : நெல்லையில் பாதிப்பு எண்ணிக்கை 2,229ஆக உயர்வு !
Jul 16, 2020, 12:08 IST1594881520000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,496 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,652ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கு தொற்று பாதிப்பு 2,229ஆக உயர்ந்துள்ளது.