இரவு பணிக்கு சென்ற கணவன்… நள்ளிரவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை… பக்கத்து வீட்டுக்காரரால் நடந்த கொடுமை

 

இரவு பணிக்கு சென்ற கணவன்… நள்ளிரவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை… பக்கத்து வீட்டுக்காரரால் நடந்த கொடுமை

கணவன் இரவு பணிக்கு சென்றதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், நள்ளிரவில் வீட்டில் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வேதனையான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் இரவு நேரத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், இரவில் பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம் பாலியல் கும்பல்கள் குடும்ப பெண்களை குறித்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது. மறு பக்கம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர். உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் தனியாக இருக்கும் பெண்களிடம் ஆசைகாட்டி மோசடி செய்து வருகின்றனர். இதேபோல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் மோகன் (36)- சுமதி (31) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் மோகன் இரவு பணிக்கு செல்வது வழக்கம். நள்ளிரவில் வீடு திரும்புவார். இந்தநிலையில், சம்பவத்தன்று மோகன் இரவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, இன்று நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதனை எதிரே வசிக்கும் முருகானந்தம் கேட்டுள்ளார். இதனிடையே, நள்ளிரவில் கணவன் வந்துவிடுவார் என்பதால் வீட்டின் கதவை திறந்துவைத்துள்ளார் சுமதி. பின்னர், கணவனின் வருகைக்காக சுமதி காத்திருந்துள்ளார். ஆனால் அவருக்கு தூக்கம் வந்துவிட்டதால் படுக்கை அறைக்கு சென்று தூங்கிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட எதிர் வீட்டுக்காரர் முருகானந்தம், மோகனின் வீட்டில் புகுந்து சுமதி படுத்திருந்த அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் சுமதியின் அருகில் படுத்துள்ளார். ஆனால், சுமதியோ தனது கணவர் என்று நினைத்துள்ளார். இதையடுத்து, முருகானந்தம் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் விழித்த சுமதி, முருகானந்தம் அருகில் இருப்பதை பார்த்து அலறியுள்ளார். அவரின் வாயை பொத்திய முருகானந்தம் மீண்டும் சுமதியை வன்கொடுமை செய்துள்ளார். அழுதபடி வீட்டில் இருந்த சுமதி, கணவர் மோகன் வந்தவுடன் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து, முருகானந்தம் மீது அண்ணாநகர் மகளிர் காவல்துறையில் சுமதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் முருகானந்தத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், “கோடை காலத்தில் காற்றுக்காக வீட்டை திறந்துவிட்டு மக்கள் வெளியே படுத்து தூங்குகின்றனர். இதை பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி விட்டு செல்கின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கதவை மூடி கொண்டு தூங்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு” என்றார்.

இதனால் கதறி அழுதுகொண்டிருந்த சுமதி, வீட்டிற்கு வந்த கணவனிடம் நடந்ததை கூறினார். அதையடுத்து, முருகானந்தம் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.