14 நாட்கள் முழு ஊரடங்கு… சீமான் வைக்கும் கோரிக்கை!

 

14 நாட்கள் முழு ஊரடங்கு… சீமான் வைக்கும் கோரிக்கை!

12ஆம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதில் கொரோனா இரண்டாவது அலை கைமீறி சென்றுவிட்டது என்றும் இதனால் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

14 நாட்கள் முழு ஊரடங்கு… சீமான் வைக்கும் கோரிக்கை!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.