உங்கள் வீடுகளை தேடி வரும் காய்கறி, பழங்கள் : தமிழக அரசு அதிரடி!

 

உங்கள் வீடுகளை தேடி வரும் காய்கறி, பழங்கள் : தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது காய்கறிகள் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

உங்கள் வீடுகளை தேடி வரும் காய்கறி, பழங்கள் : தமிழக அரசு அதிரடி!

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது காய்கறிகள் வீட்டிற்கே சென்று விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீடுகளை தேடி வரும் காய்கறி, பழங்கள் : தமிழக அரசு அதிரடி!

காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும். உள்ளாட்சி துறை மற்றும் கூட்டுறவுத் துறை இணைந்து காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் , விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.