தாயை கத்தியால் குத்தியதால் ஆத்திரம்… தந்தையை அடித்துக்கொன்ற மகன்கள்!

 

தாயை கத்தியால் குத்தியதால் ஆத்திரம்… தந்தையை அடித்துக்கொன்ற மகன்கள்!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தாயை கத்தியால் குத்திய தந்தையை, அவரது 2 மகன்களை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அடுத்த செங்கட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ் (51). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு முத்துசாமி(29), ஊர்காலன் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். வனராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

தாயை கத்தியால் குத்தியதால் ஆத்திரம்… தந்தையை அடித்துக்கொன்ற மகன்கள்!

இதில் ஆத்திரமடைந்த வனராஜ், ஈஸ்வரியை கத்தியால் குத்தியதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் கேட்டு ஓடிவந்த மகன்கள் முத்துசாமியும், ஊர்காலனும் ஆத்திரத்தில் வனராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வனராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டுசென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை வனராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முத்துசாமி, ஊர்காலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.