ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகளை அடித்து உடைத்த திமுகவினர்?!

 

ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகளை அடித்து உடைத்த திமுகவினர்?!

அம்மா மினி கிளினிக் திறப்பின் போது பதிக்கப்பட்ட கல்வெட்டுகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகள் இரவோடு இரவாக சென்னை ராயபுரத்தில் அகற்றப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகளை அடித்து உடைத்த திமுகவினர்?!

கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. குறிப்பாக சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் இந்த திட்டத்தை முதன்முதலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனால் அங்கு பதிக்கப்பட்ட கல்வெட்டில் முதலமைச்சர் பெயர், ராயபுரம் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பெயர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயக்குமார் பெயர் இருக்கும் கல்வெட்டுகளை அடித்து உடைத்த திமுகவினர்?!

இந்நிலையில் அம்மா மினி கிளினிக்கில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரை திமுக வினர் இரவோடு இரவாக சுண்ணாம்பு அடித்து மறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் ராயபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக நிறுவப்பட்ட குழாய்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு, சேக் மேஸ்த்ரி தெரு, ஜி.ம். பேட்டை தெரு,அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள், குழாய்களை திமுகவினர் அடித்து உடைத்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.