குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

 

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (பெயர் மாற்றம்). லாரி டிரைவர். இவர் குடும்பத்தினரோடு கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் கும்பலாக சிலர் வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷின் கதவை தட்டியுள்ளனர். அவர்களைப் பார்த்த பிரகாஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் கதவை திறக்கவில்லை. அதனால் கேட்டின் மேல் ஏறிய உள்ளே நுழைந்ததைப் பார்த்த பிரகாஷின் மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

பின்னர் மனைவி, குழந்தைகைள படுக்கையறைக்குள் செல்லும்படி பிரகாஷ் கூறினார். அவர்கள் அனைவரும் அங்குச் சென்ற கதவை பூட்டிக் கொண்டனர். ஹாலில் பிரகாசும் அவரின் மகனும் மட்டுமே இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த கும்பல், கத்தி முனையில் பிரகாசையும் அவரின் மகனையும் மிரட்டியது. பின்னர், பூஜை அறைக்குள் இருந்த பீரோவிலிருந்த தங்க நகைகள், பணம் கொள்ளையடித்தனர். வீட்டிலிருந்த பிரகாசின் செல்போன் மற்றும் குடும்பத்தினரின் செல்போன்கள் என மொத்தம் 3 செல்போன்களையும் பறித்துவிட்டு சென்றுவிட்டனர். கொள்ளை கும்பல் சென்றபிறகு அறைக்குள் இருந்து பிரகாசின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியில் வந்தனர்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

இதையடுத்து பிரகாஷ், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தன், ஐபிசி 397-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்தபோது 5 பைக்குகளில் 10 பேர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது செங்குன்றத்திலிருந்து புறப்பட்ட பைக்குகள் தண்டையார்பேட்டை வரை சென்றது தெரியவந்தது. மேலும் செல்போன்களின் சிக்னல்களும் கொள்ளையர்களைப் பிடிக்க உறுதுணையாக இருந்தது. இதையடுத்து சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு (32) என்பவரின் தலைமையில் 10 பேர் வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பிரகாஷ் வீட்டில் கத்தி முனையில் கொள்ளையடித்தது தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு, செல்வம், திருவொற்றியூரைச் சேர்ந்த ஆகாஷ் (19), திருவள்ளூர் மாவட்டம், பள்ளம், புதுநகரைச் சேர்ந்த யுவராஜ் (22), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற வெள்ளை கார்த்திக் (26), குப்புசாமி (25), ஜான் என்கிற ஜான்சன் (25), தோத்து என்கிற வினோத் (25), பிரசாத் (25), அத்திப்பட்டு, புதுநகரைச் சேர்ந்த மணி என்கிற டியோ மணி (22) ஆகியோரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடைய மாதவரத்தைச் சேர்ந்த அனுபா என்கிற சேகரைத் தேடிவருகிறோம்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

கைதானவர்களிடம் விசாரித்தபோது, எம்கேபி நகரைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரகுவுக்கு பிரகாசின் மனைவி அறிமுகமாகியுள்ளார். கடந்த வாரம் ராஜாவின் வீட்டுக்கு வந்த ரகு, அங்கிருந்த ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் பணத்தைக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ரகு, பிரகாசின் மனைவிக்கு ரெகுலர் கஸ்டமர் என்று கூறப்படுகிறது. அதனால் அடிக்கடி பிரகாசின் வீட்டுக்கு ரகு வந்துச் செல்வது வழக்கம். ரகு வீட்டுக்கு வந்தால் அவரையும், பிரகாசின் மனைவி ஏற்பாடு செய்யும் பெண்ணும் மாடியில் உள்ள அறைக்கு சென்றுவிடுவார்கள். அங்கு சந்தோஷமாக இருந்துவிட்டு ரகு செல்வார்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

ரகு கொடுக்கும் பணத்தை பிரகாசின் மனைவியும் ரகுவுடன் உல்லாசமாக இருக்கும் பெண்ணுக்கும் பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படி பிரகாசின் மனைவி, கணவருக்கு தெரியாமல் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். பிரகாசவின் வீட்டுக்கு ஏராளமானவர்கள் வருவதால் அங்கு பணம், நகை இருக்கும் என ரகு கருதியுள்ளார். அதனால் பிரகாசின் வீட்டில் கொள்ளையடிக்க தன்னுடைய கூட்டாளிகளுடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி பைக்கில் பிரகாசின் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் வந்த ரகு மற்றும் அவனின் கூட்டாளிகள் ஏழரை சவரன் எடையுள்ள தங்க நகைகள், குழந்தையின் வெள்ளி கொடி, 50 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசு, 9000 ரூபாய் மதிப்புள்ள 3 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். அவற்றையும் கொள்ளையடிக்க பயன்படுத்தி பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

ஆவடி பகுதியில் செங்குன்றத்தைப் போலவே இரண்டு சம்பவங்கள் நடந்ததாக வழக்கறிஞர் எஸ்டிஎஸ் டென்னி விவரித்தார். சென்னையில் ஊரடங்கு நேரத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பாலியல் தொழில் செய்பவர்கள், வீடுகளிலேயே குடும்ப செட்அப்பில் அந்தத் தொழிலில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வாரத்தில் ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 15 தினங்களுக்கு முன் ஒரு குடும்பம் குடியேறியுள்ளது. அந்த வீட்டின் குடும்ப தலைவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். குடும்பத் தலைவிக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கும் பழக்கம் உள்ளது. அதனால் அந்த வீட்டுக்கு ஆவடியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண் புரோக்கர் கஸ்டமரையும் பெண்ணையும் அனுப்பி வைத்துள்ளார்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!
வீட்டுக்கு வந்த அவர்கள், குடும்பத் தலைவியிடம் கண்சாடையில் பேசியுள்ளனர். உடனே குடும்பத் தலைவி இவர்கள் இருவரும் பிசினஸ் பேசுவதற்காக வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது என குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியில் சென்று விளையாட அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இளைஞரையும் பெண்ணையும் படுக்கையறைக்கு அனுப்பி வைத்துள்ளார் குடும்பத் தலைவி. இந்தச் சமயத்தில் மூன்று பேர் காக்கி நிற பேன்ட் அணிந்தப்படி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

அவர்கள் வீட்டிலிருந்த அனைவரையும் கத்தி முனையில் மிரட்டிவிட்டு இளைஞரும் பெண்ணும் இருந்த அறைக்குள் சென்று கதவை தட்டிள்ளனர். அவர்களையும் மிரட்டியப்படி ஹாலுக்குள் அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து நாங்கள் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ், இந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தகவல் கிடைத்தது. எங்களுக்கு கிடைத்த தகவல் உறுதியாகியுள்ளது என்று கூறியபடி அனைவரின் செல்போன்களையும், பீரோவிலிருந்த பணம், நகைகளை எடுத்துள்ளனர்.

குடும்ப செட்அப்பில் பாலியல் தொழில்; கொள்ளை புகாரால் வெளிச்சத்துக்கு வந்த மனைவியின் சீக்ரெட் – போலீஸ் என மிரட்டும் கும்பல்!

நகைகளைப் பார்த்த போலீஸ் என கூறியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அவை அனைத்தும் கவரிங். அதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வீட்டிலிருந்த குழந்தைகள், குடும்பத்தலைவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த வீட்டிலிருந்த பெண்ணை அரைநிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து தனியறையிலிருந்த பெண்ணை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு மூன்று பேரும் சென்றுவிட்டனர். அதன்பிறகு அந்தப் பெண் அணிந்திருந்த தாலியை மட்டும் பறித்துக் கொண்டு அவரை திருமுல்லைவாயல் சந்திப்பில் இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்போது உன்னுடைய வீடியோ எங்களிடம் இருக்கிறது. அதை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க நாங்கள் எப்போதெல்லாம் உனக்கு போன் செய்து கூப்பிடும் போது நீ வர வேண்டும். மேலும் இந்தச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் உன் மானம் கப்பலேறிவிடும் என்று மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களுக்கு பிறகு ஆவடி காமராஜர் நகரிலும் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால், பணம், நகைகளை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. அதற்கு புகாரளித்தால் விசாரணையின்போது முழு தகவல்களும் வெளியாகி, அது தங்களுக்கு சிக்கலாகிவிடும். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. மேலும் குடும்ப செட்அப்பில் நடக்கும் பாலியல் தொழில்களில் வறுமை காரணமாக குடும்ப பெண்கள் தள்ளபடுகின்றனர் என்றார்.

நடவடிக்கை எடுக்குமா சென்னைப் போலீஸ்

-எஸ்.செல்வம்