தர்ஷன் – ஷனம் ஷெட்டி வழக்கில் புதிய திருப்பம் : உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு இதோ!

 

தர்ஷன் – ஷனம்  ஷெட்டி வழக்கில் புதிய திருப்பம் : உயர் நீதிமன்றத்தின்  புதிய உத்தரவு இதோ!

பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். இவர் மீது தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் நானும் தர்ஷனும் காதலித்து வந்தோம். அவருக்காக நான் இதுவரை ரூ.15 லட்சத்திற்கும் மேலாக செலவு செய்துள்ளேன். எனக்கும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டநிலையில் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். என்னுடன் அவர் பாலியல் உறவிலும் ஈடுபட்டுள்ளார். அவரால் நான் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறினார்.

தர்ஷன் – ஷனம்  ஷெட்டி வழக்கில் புதிய திருப்பம் : உயர் நீதிமன்றத்தின்  புதிய உத்தரவு இதோ!

ஷனம் ஷெட்டியின் புகாரை தொடர்ந்து தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் பிக் பாஸ் தர்ஷன் தனது முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். தன்னை மனா உளைச்சலுக்கு ஆளாக்கி, துன்புறுத்தவே ஷனம் ஷெட்டி பொய் புகார் அளித்ததாகவும், அதனால் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

தர்ஷன் – ஷனம்  ஷெட்டி வழக்கில் புதிய திருப்பம் : உயர் நீதிமன்றத்தின்  புதிய உத்தரவு இதோ!

இந்நிலையில் தர்ஷனின் மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு நிபந்தையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.