போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு

 

போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு

இன்று காலை சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு

வாகன சோதனையின் போது போலீசை ஒருமையில் பெண் ஒருவர் பேசிய வைரலானது. முகக்கவசம் அணியாமல் சென்ற தனது மகளுக்கு போலீசார் அபராதம் விதித்ததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

இந்நிலையில் போலீசாரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக போக்குவரத்து காவலர் அந்த பெண் மீது சேத்துபட்டு காவல் நிலையத்தில் போக்கு வரத்து காவலர் ரஜித்குமார் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த பெண் மீது, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படுதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பொது உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.