அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சொத்து குவிப்பு தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு டிச.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011-13 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இருப்பினும், அவரது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி, லஞ்ச ஒழிப்புக்குழுவினர் விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மகேந்திரனின் வழக்கை நீதிபதிகள் டிச.17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.