வெடிகள் வெடித்த வேகத்தில் தூக்கி விசப்பட்டதில் மரத்தில் சிக்கி தொங்கிய உடல்

 

வெடிகள் வெடித்த வேகத்தில் தூக்கி விசப்பட்டதில் மரத்தில் சிக்கி தொங்கிய உடல்

பட்டாசு ஆலை விபத்தில் சிக்கும் தொழிலாளிகள் உயிரிழந்து கரிக்கட்டையாக கிடப்பார்கள். ஆனால், ஒரு பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி பட்டாசுகள் பலமாக வெடித்ததில் ஒரு தூக்கி வீசப்பட்டதால் அவரது உடல் மரத்தில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெடிகள் வெடித்த வேகத்தில் தூக்கி விசப்பட்டதில் மரத்தில் சிக்கி தொங்கிய உடல்
fire

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த ஜமீன் சல்வார்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அறையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியபோது அந்த தொழிலாளி தூக்கி வீசப்பட்டார்.

தூக்கி வீசப்பட்டதில் அவர் உடல் மரத்தில் சிக்கிக்கொண்டது. மரத்தில் மேல் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.