“4 மாதக் கட்டணம் ரூ.3150ஐ திருப்பித் தாருங்கள்” – கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்!

 

“4 மாதக் கட்டணம் ரூ.3150ஐ திருப்பித் தாருங்கள்” – கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்!

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தான் நடைபெற்றது. ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்தே கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

“4 மாதக் கட்டணம் ரூ.3150ஐ திருப்பித் தாருங்கள்” – கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்!

கேந்திரிய வித்யாலயாவின் செயல் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பத்தாவது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 21லேயே முடிந்துவிட்டது. கொரோனா இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3 2021 அன்றுதான் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது. ஆனால் பதினோராவது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டு, இரண்டாவது காலாண்டு என ஒன்றரை மாதத்திற்கு சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பில் சேராத காலத்தில் டியூசன் கட்டணம் 1200, வித்யா விகாஸ் நிதி 1,500 , கணினி கட்டணம் 300 , கணினி அறிவியல் கட்டணம் 150 என வசூலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சில பெற்றோர் என்னை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர். வகுப்புகள் கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்திற்கு கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது. ஆகவே இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும். இல்லாவிடில் எதிர்கால கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.