தஞ்சாவூர்-170 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கைக்கு கடத்த முயற்சியா ?

 

தஞ்சாவூர்-170 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கைக்கு கடத்த முயற்சியா ?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 170 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மல்லிப்பட்டினம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தஞ்சாவூர் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து , இன்று ( வெள்ளிக்கிழமை )அதிகாலை மல்லிப்பட்டினம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்-170 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கைக்கு கடத்த முயற்சியா ?

அப்போது , மல்லிப்பட்டினம் அருகே உள்ள வெளிவயல் கடல் பகுதியிலிருந்து நான்கு நாட்டிக்கல் மைல் தொலைவில் கண்ணாடி இழைப் படகு நின்றுள்ளது. அதை சோதனையிட்ட போலீசார்,
தலா 2 கிலோ எடையுள்ள 85 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அவை இலங்கைக்கு கடத்த இருந்ததை அடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர்-170 கிலோ கஞ்சா பறிமுதல் – இலங்கைக்கு கடத்த முயற்சியா ?

இதையடுத்து படகில் இருந்த அதிராம்பட்டினம்,கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நாகூரான் மகன் குமார் (38), அதே பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (35), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், புதுக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த கந்தன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தபர். கைது செய்யப்பட்டுள்ள குமார் படகின் உரிமையாளர் ஆவார்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள 175 கிலோ கஞ்சா மதுரையிலிருந்து தரை வழியாக மணல்மேல்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கிருந்து கடல் வழியாக கொண்டுவரப்பட்டு அலையாத்திக்காடுகள் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றும்போது போலீஸார் சுற்றிவளைத்து பிடித்து பறிமுதல் செய்தனர்.

போலீஸ் முதற்கட்ட விசாரணையில், மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த சிலோன் சேகர் என்ற சேகர் (60) என்பவர் இந்த பொட்டலங்களை மணல்மேல்குடிக்கு தரை மார்க்கமாக கொண்டுவந்து குமாரிடம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சேகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மொத்த எடை 175 கிலோ என்றும் அதன் மதிப்பு ரூ 15 லட்சம் என்றும் போலீசார் கூறினர்.