எடப்பாடிக்காக டெல்லிக்கு தூது போன இரு அமைச்சர்கள்!

 

எடப்பாடிக்காக டெல்லிக்கு தூது போன இரு அமைச்சர்கள்!

அதிமுக செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், 2 மூத்த அமைச்சர்கள் டெல்லி சென்று பாஜக தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் வரும் நாளை காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தலைமை கழகத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக அலுவலகத்தில் 3 பகுதிகளில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

எடப்பாடிக்காக டெல்லிக்கு தூது போன இரு அமைச்சர்கள்!

இந்த சூழலில் தமிழக அமைச்சர்கள் தங்க மணி, மற்றும் எஸ்பி. வேலுமணி ஆகியோர் இணைந்து விமானத்தில் டெல்லிக்கு சென்றனர். அங்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை ரகசியமாக சந்தித்து பேசினார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும், ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தவும் பாஜக மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.