வருங்கால மனைவி திடீர் மரணம்: சோகத்தில் தமிழக ராணுவ வீரர் தற்கொலை!
வருங்கால மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைத் தாங்க முடியாமல், அஸ்ஸாமில் பணியாற்றிய ராணுவ வீரரும் தற்கொலை செய்து கொண்டார்.
மேல்மலையனூர்: வருங்கால மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதைத் தாங்க முடியாமல், அஸ்ஸாமில் பணியாற்றிய ராணுவ வீரரும் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள முருகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ராணுவ வீரராக அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக குடும்ப பிரச்னை காரணமாக அந்த பெண் கடந்த 2 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை சையது கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம் ஊருக்கு வருவதாக கூறி விமான டிக்கெட்டையும் புக் செய்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் அஸ்ஸாம் முகாமில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராஜமாணிக்கத்தின் உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காதலியின் இழப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராணுவவீரரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.