ராணுவ அதிகாரி சுட்டு கொலை: சென்னையில் பரபரப்பு!
பிரவின் குமார் ஜோஷியை காண அவரது வீட்டுக்கு மற்றொரு வீரரான ஜெகஷிர் வந்துள்ளார்.
சென்னை: பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவின் குமார் ஜோஷி. ஹவில்தாராக உள்ள இவர் அப்பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவின் குமார் ஜோஷியை காண அவரது வீட்டுக்கு நேற்று நள்ளிரவில் ரைபிள் மேன் ஜெகஷிர் வந்துள்ளார். அப்போது அந்த குடியிருப்பிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த சில விரைந்து சென்று அங்குப் பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணிக்கு வருவது குறித்து பிரவீன் குமாருக்கும், ஜெகஷிருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த ஜெகஷிர், பிரவின் குமாரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.