ரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்! 

 

ரஜினிகாந்த் மீது 6 மாவட்ட காவல்நிலையங்களில் புகார்! 

பெரியார் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது ஆறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பெரியார் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது ஆறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

துக்ளக் 50வது ஆண்டு நிறைவு விழாவில் முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் அவர் தி.முக என்று கூறிவிடலாம். ஆனால், துக்ளக் பத்திரிகை வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார் என பேசினார். அதுமட்டுமின்றி ராமர் படத்தை பெரியார் செருப்பைக்கொண்டு சேதப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். 

ரஜினிகாந்த்

இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பெரியார் குறித்து அவதூறு பேசியதற்காக சென்னை திருவல்லிக்கேணி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம், புதுக்கோட்டை உட்பட ஆறு காவல்நிலையங்களில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.