மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்…கமல் ஹாசன் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து!
மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், பல கேள்விகள், ‘சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்’ என்று பதிவிட்டுள்ளார்.
பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2020
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கமல்ஹாசன் கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிகளில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.