‘மி டூ,, வி டூ எல்லாமே ஏமாற்று வேல தான்!’ – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

 

‘மி டூ,, வி டூ எல்லாமே ஏமாற்று வேல தான்!’ – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

இந்திய அளவில் புயலை வீசி வரும் மி டூ விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்திய அளவில் புயலை வீசி வரும் மி டூ விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு தனிமையில் நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் தொடங்கி தமிழ் திரையுலகம் வரை புயலை வீசி வரும் அந்த ஹேஸ்டேக்கிற்கு எதிராகவும் சில நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “Me Too, We Too விவகாரத்தைப் பொறுத்தவரையில் அனைவருமே You Too Brutus தான். இது ஒரு ஏமாற்று வேலை” எனக் கிண்டல் செய்துள்ளார்.