மார்ச் 23முதல் மார்ச் 31வரை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறைப்பு

 

மார்ச் 23முதல் மார்ச் 31வரை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறைப்பு

பிரதமரின் சுய ஊரடங்குக்குச் சென்னை மெட்ரோ நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்து 22 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்களை ரத்து செய்ய உள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

chennai metro train

இந்நிலையில் கொரோனா எதிரொலியாக சென்னையில் மார்ச் 23முதல் மார்ச் 31வரை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 4.30 – 6 மணி, காலை 10 மணி-மாலை 4 மணி, இரவு 8-11 மணி வரை ரயில்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மாலை 4  முதல் இரவு 8 மணி வரை அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டுமே மெட்ரோவில் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.