மனைவியின் தகாத உறவு: கணவனை கொலை செய்த கள்ளக்காதலன்; உடந்தையாக இருந்த மனைவி?!

 

மனைவியின் தகாத உறவு: கணவனை கொலை செய்த கள்ளக்காதலன்; உடந்தையாக இருந்த மனைவி?!

கொலையில் மணிகண்டனின் மனைவி மற்றும் அவரின் தாய் , தந்தை மூவருக்கு ம் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விருதுநகர் ஆணைக்குழாயைச் சேர்ந்த மணிகண்டனுக்கும்  மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜோதி லட்சுமிக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

ttn

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜோதி லட்சுமியின் பெற்றோருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களைக் கவனித்து கொள்வதாகக் கூறி ஜோதிலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஜோதிலட்சுமிக்கு அங்கிருந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து பெற்றோர் குணமடைய ஜோதிலட்சுமி வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் கார்த்திக் உடன் இருந்த பழக்கத்தைக் கைவிடவில்லை. ஒருகட்டத்தில் விஷயம் மணிகண்டன் காதுக்கு செல்ல கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோதிலட்சுமி தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுள்ளார். 

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம்  காலை கார்த்திக் மற்றும் நண்பர் ஒருவருடன் விருதுநகரிலுள்ள கணவரின் வீட்டிற்கு ஜோதி லட்சுமி சென்று  என் அம்மா உங்களை  வீட்டிற்குச்சமாதானம் பேச அழைத்து வர சொன்னார் என்று கூற. இதை தனது பெற்றோரிடம் மணிகண்டன் சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றுள்ளார். இதை தொடர்ந்து மணிகண்டன் தனது அம்மாவுக்கு போன் செய்து அம்மா அம்மா என்று கத்தியபடி போனை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய்க்கு போன் செய்த ஜோதிலட்சுமி கார்த்திக்  உங்கள் மகனை கொன்றுவிட்டார் என்று கூறி மேலும் அதிர்ச்சியை கொடுக்க இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ttn

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போலீசார், ஜோதி லட்சுமி வீட்டின் அருகே இருந்த மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் மணிகண்டனின் மனைவி மற்றும் அவரின் தாய் , தந்தை மூவருக்கு ம் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ttn

முன்னதாக கார்த்திக் ஜோதிலட்சுமியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் ஜோதிலட்சுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.