பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: போற்றிப் புகழும் தமிழிசை!

 

பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார்: போற்றிப் புகழும் தமிழிசை!

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ, துணை போலீஸ் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் உள்ளிட்ட 13 பேர் நேற்று டி.ஜி.பி. அலுவலகம் சென்று பொன் மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். அதோடு இன்றி, பொன் மாணிக்கவேல் தலைமையில் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றியதாகவும், இனி தங்களால் செயல்பட முடியாது என்றும் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

pon manickavel

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, “என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே. என்மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. என்னைப் பற்றி அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது” என தன் தரப்பு நியாயத்தை செய்தியாளர்கள் முன்பு பொன்.மாணிக்கவேல் கூறியிருந்தார். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதாகவும், அவருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.