புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

 

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 460 நெருங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் என அனைவருக்கும் கொரோனா பரவி வருகிறது.

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்நிலையில் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த திங்கட்கிழமை அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.